ராஜஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி

ராஜஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.
ராஜஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி
(File Photo | PTI)
Updated on
1 min read

ராஜஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.

ராஜஸ்தானின் பிவாடி நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 7 பேர் உயிருடன் எரிந்து பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரண்டு தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர்.

வழக்கமான ரோந்துப் பணியின் போது இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தெரியவந்ததாகவும், அதைத் தொடர்ந்து உடனடியாக மீட்புப் பணி தொடங்கப்பட்டதாகவும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுமிதா மிஸ்ரா தெரிவித்தார். 9 பேர் உள்ளே சிக்கியுள்ளனர். இதுவரை ஏழு உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள இரண்டு தொழிலாளர்களை மீட்பதற்கான தீவிர முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். பிவாடியின் குஷ்கேரா-கரோலி தொழில்துறை பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Seven workers were burnt alive when a fire broke out in a chemical factory in Rajasthan's Bhiwadi town on Monday, officials said. Two workers remain trapped inside the unit.

ராஜஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி
மேற்கு வங்கம்: தனியார் மருத்துவக் கல்லூரியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலம் மீட்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com