நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

மும்பை சாலையில் நடைப்பயிற்சி செய்த பிரான்ஸ் அதிபர்!

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் மும்பை சாலையில், நடைப்பயிற்சி மேற்கொண்டது குறித்து....

News image

பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இமானுவல் மேக்ரான் - படம் - எக்ஸ்

Updated On :17 பிப்ரவரி 2026, 5:50 pm IST

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் மும்பை சாலையில், தனது பாதுகாவலர்களுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நடைப்பயிற்சியுடன் இன்றைய பொழுதைத் தொடங்கிய இமானுவல் மேக்ரான், பிறகு தனது மனைவி பிரிகேட் மேக்ரானுடன் 2008 நவம்பர் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்தியா சாா்பில் நடத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு 2026-இல் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின்பேரில் இமானுவல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக (பிப். 17 - 19) இந்தியா வருகைப் புரிந்துள்ளார்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் அதிபர் சந்திக்கவுள்ளார்.

பின்னா், மாலை 5.15 மணிக்கு இரு தலைவா்களும் மும்பையில் நடைபெறும் ‘இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026’ வா்த்தக மாநாட்டைத் தொடங்கிவைத்து, இரு நாடுகளைச் சோ்ந்த தொழில்நிறுவனத் தலைவா்கள், புத்தாக்க நிறுவனா்கள், ஆராய்ச்சியாளா்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனா்.

Summary

French President Emmanuel Macron spotted jogging in Mumbai earlier today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.