மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடு முடிவதற்குள் 300 நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இதையடுத்து, அதற்கான நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சத்தீஸ்கர், தெலங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இயங்கி வரும் நக்சல்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன.
இதன்மூலம், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர்களான மிசிர் பெஸ்ரா (எ) பாஸ்கர், தேவ்ஜி (எ) கும்பா தாதா, ராமண்ணா (எ) கணபதி மற்றும் மல்லா ராஜ ரெட்டி (எ) சாகர் ஆகியோரைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் தேவ்ஜி மற்றும் அவரது கூட்டாளியான கேசா சோதி ஆகியோர் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 17) மாபெரும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மல்லா ராஜ ரெட்டியை தவிர மற்ற நக்சல் தளபதிகள் ஒடிசாவின் வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, முக்கிய தலைவர்கள் 4 பேர் உள்பட சுமார் 300 நக்சல்கள் தற்போது தேடப்பட்டு வருகின்றனர். இதனால், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அவர்கள் அனைவரும் சரணடைய வேண்டும் அல்லது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் அவர்கள் கொல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Summary
security forces are carrying out operations to eliminate 300 Naxalites, including 4 senior commanders, before the deadline set by the central government expires.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிலிருந்தே வேலை; தேவையற்ற பயணங்கள் தவிர்ப்பு: ஊழியர்களுக்கு மாருதி சுசுகி அறிவுறுத்தல்!

ஒரே நாளில் அமித் ஷாவை சந்தித்த பாஜக முதல்வர்கள்!

நெல்லையில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா்

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




