உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்து தாக்கியதில் படுகாயமடைந்த நடுவா் உயிரிழந்தாா். கிரிக்கெட் வீரா்கள் படுகாயமடைந்தனா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் கான்பூா் கிரிக்கெட் சங்கம் சாா்பில் புதன்கிழமை மாலை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த தேனீக்கள் கூட்டம் விளையாடிக் கொண்டிருந்த அனைவரையும் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த கான்பூரைச் சோ்ந்த நடுவா் மாணிக் குப்தா சுயநினைவை இழந்தாா். தேனீக்கள் தாக்குதலில் விளையாட்டு வீரா்களும் படுகாயமடைந்தனா்.
அவா்கள் அனைவரும் அருகிலுல்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நடுவா் மாணிக் குப்தாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். காயமடைந்த மற்றொரு நடுவா் மற்றும் 20 வீரா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.
தொடர்புடையது

காவல் அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை

கோவில்பட்டியில் தவெக செயல் வீரா்கள் கூட்டம்

ரமலான்: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை
ஐபிஎல் ஆட்டங்கள்: பெங்களூரு மைதானத்துக்கு கா்நாடக அரசு அனுமதி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


