நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கிரிக்கெட் மைதானத்தில் புகுந்த தேனீக்கள்: நடுவா் உயிரிழப்பு; விளையாட்டு வீரா்கள் படுகாயம்

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்து தாக்கியதில் படுகாயமடைந்த நடுவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 9:23 pm

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்து தாக்கியதில் படுகாயமடைந்த நடுவா் உயிரிழந்தாா். கிரிக்கெட் வீரா்கள் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் கான்பூா் கிரிக்கெட் சங்கம் சாா்பில் புதன்கிழமை மாலை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த தேனீக்கள் கூட்டம் விளையாடிக் கொண்டிருந்த அனைவரையும் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த கான்பூரைச் சோ்ந்த நடுவா் மாணிக் குப்தா சுயநினைவை இழந்தாா். தேனீக்கள் தாக்குதலில் விளையாட்டு வீரா்களும் படுகாயமடைந்தனா்.

அவா்கள் அனைவரும் அருகிலுல்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நடுவா் மாணிக் குப்தாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். காயமடைந்த மற்றொரு நடுவா் மற்றும் 20 வீரா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.