திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒன்றை கட்டமைத்துள்ளது இந்தியா! பிரான்ஸ் அதிபர்

தில்லி ஏஐ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசியது பற்றி...

News image

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் - PTI

Updated On :19 பிப்ரவரி 2026, 10:57 am IST

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒன்றை இந்தியா கட்டமைத்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

தில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் செய்யறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, நமஸ்தே என்று தனது உரையைத் தொடங்கிய இமானுவேல் மேக்ரான், இந்த அற்புதமான நகருக்கு எங்களை வரவேற்றதற்கு நன்றி எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

”10 ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையில் சாலையோர வியாபாரி ஒருவரால் வங்கிக் கணக்குகூட தொடங்க முடியாத நிலையில் இருந்தார். முகவரி இல்லை, ஆவணங்கள் இல்லை போன்றவை காரணங்களாக இருந்தன. இன்று அதே வியாபாரி தனது தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெறுகிறார்.

உலகில் எந்த நாடும் கட்டமைக்காத ஒன்றை இந்தியா கட்டமைத்துள்ளது. 140 கோடி ஆதார் அட்டை என்ற மக்களுக்கு டிஜிட்டல் அடையாளத்தை வழங்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2,000 கோடி ரூபாய் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்படுகிறது. 50 கோடி மக்களுக்கு டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து ஏஐ செயல் உச்சி மாநாட்டை பாரிஸில் நடத்தியபோது, நமது சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்தை மாற்றும் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய வழிகாட்டு கொள்கைகளை நாங்கள் அமைத்தோம்.

மனிதகுலத்தின் நன்மைக்காகவும், புதுமைகளை வேகமாக உருவாக்கவும் செய்யறிவு உதவும் என்று நாங்கள் கூறுகிறோம். இந்தியாவும் பிரான்ஸும் இந்த புரட்சியில் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்தியாவிடம் 140 கோடி மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொண்டுவர முடியாது என்று உலக நாடுகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு கூறியது. அதை தவறு என்று இந்தியா நிரூபித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Summary

India has built something that no other country in the world has! President of France

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.