வங்கதேச நாட்டின் வான்வழியைப் பயன்படுத்துவதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அரசுக்கு நிலுவைத் தொகையைச் செலுத்தாததால், அந்நாட்டின் வான்வழியைப் பயன்படுத்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வங்கதேச வான்வழிப் பாதை முடக்கப்பட்டதால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சில விமானங்கள் மிக நீண்ட மாற்றுப்பாதைகளில் பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கொல்கத்தாவில் இருந்து குவாஹட்டி போன்ற நகரங்களுக்கு மாற்றுப்பாதையில் செல்லும் விமானங்களின் பயணம் அதிக நேரம் எடுப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் வழக்கமானது என்றும், இதுகுறித்து வங்கதேச அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கான முழுமையான காரணம் குறித்து வங்கதேச அரசிடமிருந்து எந்தவொரு தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், மீதமுள்ள நிலுவைத் தொகையைச் செலுத்தாததே அதற்கான காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2025 டிசம்பர் வரையிலான வெறும் மூன்று மாதகாலத்தில் ரூ. 267.27 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
SpiceJet flights have been banned from using Bangladeshi airspace.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை மாநகரில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்க தடை

ஏப். 3-இல் பிரதமா் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப எந்தத் தடையும் இல்லை: வங்கதேச அரசு

துணை முதல்வா் திருப்பத்தூா் வருகை: மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


