மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வங்கதேச வான்வழியில் பறக்க ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்குத் தடை!

வங்கதேச வான்வழியில் பறக்க ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image
ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்குத் தடை.. (கோப்புப் படம்)- ANI
Updated On :19 பிப்ரவரி 2026, 2:50 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேச நாட்டின் வான்வழியைப் பயன்படுத்துவதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அரசுக்கு நிலுவைத் தொகையைச் செலுத்தாததால், அந்நாட்டின் வான்வழியைப் பயன்படுத்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வங்கதேச வான்வழிப் பாதை முடக்கப்பட்டதால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சில விமானங்கள் மிக நீண்ட மாற்றுப்பாதைகளில் பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கொல்கத்தாவில் இருந்து குவாஹட்டி போன்ற நகரங்களுக்கு மாற்றுப்பாதையில் செல்லும் விமானங்களின் பயணம் அதிக நேரம் எடுப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வழக்கமானது என்றும், இதுகுறித்து வங்கதேச அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கான முழுமையான காரணம் குறித்து வங்கதேச அரசிடமிருந்து எந்தவொரு தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், மீதமுள்ள நிலுவைத் தொகையைச் செலுத்தாததே அதற்கான காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, 2025 டிசம்பர் வரையிலான வெறும் மூன்று மாதகாலத்தில் ரூ. 267.27 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.