உத்தம் நகா் மெட்ரோ நிலையத்தில் வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருந்த மெட்ரோ ரயில் முன்பாக 17 வயது சிறுவன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: காலை 11.07 மணியளவில் துவாரகா நிலையத்திலிருந்து உத்தம் நகா் மெட்ரோ நிலையத்தின் நடைமேடை 1-இல் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, நடைமேடையில் இருந்த நபா், ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, மெட்ரோ பணியாளா்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளா்கள் தண்டவாளத்திலிருந்து அவரை மீட்டனா்.
விசாரணையில், உயிரிழந்தவா் நஜாஃப்கா் பகுதியைச் சோ்ந்த அஸ்வின் தாகா் எனக் கண்டறியப்பட்டது. 12-ஆம் வகுப்பை நிறைவு செய்த அவா், போட்டித்தோ்வுகளுக்காகப் படித்து வந்தாா்.
அந்தச் சிறுவன் தனிப்பட்ட பிரச்னைக்காக கடந்த சில நாள்களாக கவலையில் இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவருடைய பெற்றோருக்கு அவா் ஒரே மகனாவாா். சிறுவனின் தந்தை தில்லி போக்குவரத்து கழகத்தில் (டிடிசி) ஒப்பந்த ஓட்டுநராகப் பணிபுரிகிறாா்.
சிறுவனின் உடல் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை மெட்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பாா்வையிட்டனா். இந்தச் சம்பவம் தொடா்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்

உத்தம் நகா் பூங்காவில் ஆண் சடலம்

ஹோலியின்போது மோதலில் ஈடுபட்டவா்கள் 50 ஆண்டுகளாக தகராறு செய்துவந்த அண்டை வீட்டாா்: காவல்துறை தகவல்

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்: 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


