பஞ்சாபின் குர்தாஸ்பூரில் இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அடியான் பகுதியில் இரண்டு போலீஸார் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர்கள் குர்நாம் சிங் மற்றும் அசோக் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அசோக் குமார் ஊர்க்காவல் படை வீரர் என்றும் குர்நாம் சிங் குர்தாஸ்பூரில் உள்ள டோரங்லா காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் என்றும் அந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரி பனார்சி தாஸ் தெரிவித்துள்ளார்.
தகராறு காரணமாக இரண்டு போலீஸாரும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேட்டபோது, "தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது," என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். இச்சம்பவம் குர்தாஸ்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Two policemen were on Sunday found dead with bullet injuries in Adian in Punjab's Gurdaspur district, a police official said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் பந்துவீச்சு: 2 மாற்றங்களுடன் பேட்டிங் செய்யும் சன்ரைசர்ஸ்!

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- 5 பேர் கைது

ஐபிஎல் 2026: ஆரஞ்ச் கேப், பர்பிள் கேப், டேபிள் டாப்பர் என ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாப்!

மும்பையில் டெலிவரி டெம்போவிலிருந்து 27 எல்பிஜி சிலிண்டர்கள் திருட்டு!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


