ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

தில்லியில் ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது
கைது செய்யப்பட்ட உதய் பானு சிப்
கைது செய்யப்பட்ட உதய் பானு சிப்
Updated on
1 min read

தில்லியில் ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார்.

புதுதில்லியில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு, பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸார், மாநாட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழற்றி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளர் கிருஷ்யா ஹரி, பிகார் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் குந்தன் யாதவ், உத்தரப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அஜய் குமார், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவரான உதய் பானு சிப்பும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட உதய் பானு சிப்
தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்
Summary

Youth Congress Chief Uday Bhanu Chib Arrested Over Shirtless Protest During India AI Impact Summit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com