அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 10 மணி நேர விசாரணைக்குப் பின் திரும்பிய அனில் அம்பானி
அனில் அம்பானி
அனில் அம்பானிPTI
Updated on
1 min read

புது தில்லி : அமலாக்கத்துறை தலைமையகத்தில் இருந்து வியாழக்கிழமை(பிப். 26) 10 மணி நேர விசாரணைக்குப் பின் தொழிலதிபர் அனில் அம்பானி வீடு திரும்பினார்.

வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மோசடி செய்தது குறித்து அமலாக்கத் துறை பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை தலைமையகத்தில் அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,716 கோடி மதிப்பிலான பங்களாவை பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பான விசாரணைக்காக கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்முறை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா். அதன் தொடர்ச்சியாக தில்லியிலுள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் அவரிடம் இன்று விசாரணை நடைபெற்றது.

அனில் அம்பானி
அனில் அம்பானியின் ரூ.3,716 கோடி பங்களா முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை!
Summary

Industrialist Anil Ambani leaves from the ED officer after about 10 hours of questioning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com