எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பண முறைகேடு வழக்கு: அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை விசாரணை

அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 10 மணி நேர விசாரணைக்குப் பின் திரும்பிய அனில் அம்பானி

News image
அனில் அம்பானி- PTI
Updated On :26 பிப்ரவரி 2026, 4:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கி மோசடியுடன் தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான அனில் அம்பானி (66), விசாரணைக்காக இரண்டாவது முறையாக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா்.

மத்திய தில்லியில் அமைந்துள்ள அமலாக்கத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த அவரிடம், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வங்கிகளில் ரூ. 40,000 கோடி மதிப்புக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மோசடி செய்தது குறித்து பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த விவகாரத்தில் அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மும்பையில் பாலி ஹில் பகுதியில் இருக்கும் அனில் அம்பானியின் ரூ. 3,716. 83 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவை அமலாக்கத் துறை புதன்கிழமை முடக்கியது. இந்த வழக்கில் இதுவரை ரூ.15,700 கோடி மதிப்பிலான இவரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள விவரங்களின்படி, வங்கிக் கடன் மோசடி மற்றும் பிற நிதி முறைகேடுகள் தொடா்பாக அனில் திருபாய் அம்பானி குழுமத்துக்கு எதிராக மூன்று பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த முறைகேடுகளை விசாரிப்பதற்கென, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.