தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வரான சுநேத்ரா பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவரான பிரஃபுல் படேல் அறிவித்துள்ளார்.
மும்பையில் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக சுநேத்ரா பவார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், புதிய தலைமையின்கீழ் ஒற்றுமையுடனும் வலிமையுடனும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் படேல் கூறினார்.
முன்னதாக, மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவார் ஜன. 28 ஆம் தேதி பாராமதியில் நேரிட்ட விமான விபத்தில் பலியானார். இதையடுத்து, அவரது மனைவி சுநேத்ரா பவார் கடந்த ஜனவரி 31-ல் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
Summary
Maharashtra Deputy CM Sunetra Pawar elected as the National President of NCP
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்

திரிணமூல் காங்கிரஸின் அனைத்து அமைப்புகளும் கலைப்பு!

கேரளம்! பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விடுதலை!
அநீதிக்கு எதிராக முஸ்லிம்கள் குரலெழுப்ப வேண்டும்: ராகுல் காந்தி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



