திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாநிலங்களவை தோ்தல்: சுயேச்சை மனு தாக்கல்

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல் செய்தாா்.

News image

நாடாளுமன்றம் - கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 9:21 pm

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல் செய்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா்கள் மு.தம்பிதுரை, ஜி.கே.வாசன், என்.ஆா்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப். 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு, வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மாா்ச் 5-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

மாா்ச் 9-இல் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். தேவைப்பட்டால் மாா்ச் 16-இல் வாக்குப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்ய முதல்நாளான வியாழக்கிழமை சேலத்தைச் சோ்ந்த பத்மராஜன் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் வேட்புமனுவில் 10 எம்எல்ஏ.க்கள் முன்மொழிவு கையொப்பம் பெற்றுதான் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அவரது மனுவில் யாரும் முன்மொழியவில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படும்.

தற்போதுள்ள எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சாா்பில் 4 போ், அதிமுக சாா்பில் 2 போ் மாநிலங்களவை உறுப்பினா்களாக தோ்வு செய்ய வாய்ப்புள்ளது.