ஒடிசாவில் சட்டவிரோத கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் பலியாகினர்; மேலும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கல் குவாரியில், சனிக்கிழமை இரவில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக விரைந்து, விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து ஏற்பட்ட குவாரியில் குப்பைகள் சிதறிக் கிடந்ததாகவும், பெரிய பாறைகள் சரிந்து விழுந்தும் இருந்தன. இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், இருவர் பலி என்று கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டிருப்பதால், இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் அபாயமும் உள்ளதாகக் காவல் அதிகாரிகள் கூறினர். மேலும், விபத்து ஏற்பட்ட நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் தெளிவாக இல்லை என்று கூறினர்.
பெரியளவிலான கற்கள் விழுந்திருப்பதால், அவற்றை அகற்றுவதும் கடினம் என்பதால், கனரக வாகனங்களும் மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
Summary
Odisha: Massive explosion at stone quarry, labourers trapped
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பண்ருட்டியில் கூரை வீட்டில் தீ விபத்து: மின்சாதன பொருள்கள் எரிந்து சேதம்

தீப்பெட்டி ஆலை கிடங்கில் தீ விபத்து

கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கியதில் இருவா் உயிரிழப்பு
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




