கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஒடிசா கல் குவாரியில் வெடிவிபத்தில் இருவர் பலி! மேலும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்பு!

ஒடிசாவில் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பாறைகள் சரிந்ததில் தொழிலாளர்கள் பலரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு

விபத்து ஏற்பட்ட கல் குவாரி

Published On :

ஒடிசாவில் சட்டவிரோத கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் பலியாகினர்; மேலும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கல் குவாரியில், சனிக்கிழமை இரவில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக விரைந்து, விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Story image

விபத்து ஏற்பட்ட குவாரியில் குப்பைகள் சிதறிக் கிடந்ததாகவும், பெரிய பாறைகள் சரிந்து விழுந்தும் இருந்தன. இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், இருவர் பலி என்று கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டிருப்பதால், இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் அபாயமும் உள்ளதாகக் காவல் அதிகாரிகள் கூறினர். மேலும், விபத்து ஏற்பட்ட நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் தெளிவாக இல்லை என்று கூறினர்.

பெரியளவிலான கற்கள் விழுந்திருப்பதால், அவற்றை அகற்றுவதும் கடினம் என்பதால், கனரக வாகனங்களும் மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

Summary

Odisha: Massive explosion at stone quarry, labourers trapped

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.