ஒடிசாவில், மூன்று மாவட்ட நீதிமன்றங்களுக்கு இன்று (ஜன. 8) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் சம்பால்பூர், தியோகார் மற்றும் கட்டாக் ஆகிய மாவட்ட நீதிமன்றங்களுக்கு இன்று மதியம் 2.35 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் ஒடியா மொழியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த நீதிமன்றங்களில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன் நீதிமன்றங்களின் வளாகங்கள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சேதனைகளில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததினால் இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டாக்கில் உள்ள ஒரிசா உயர் நீதிமன்றத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில், நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீதிமன்றப் பணிகள் அனைத்தும் சில மணிநேரங்களுக்கு முடங்கியுள்ளன. இதனால், இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி அறிவுறுத்தியுள்ளார்.
Summary
In Odisha, bomb threats were issued today (Jan. 8) via email to three district courts.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




