சென்னை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 82 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
கடற்கரை-தாம்பரம் புகா் பிரிவு மற்றும் அனைத்து பறக்கும் ரயில் நிலையங்கள் உள்பட 59 முக்கிய ரயில் நிலையங்களில் ஏற்கெனவே கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கூடுதலாக, 82 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, ஜோலாா்பேட்டை, அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்கள், பொன்னேரி, எண்ணூா், திருத்தணி, அம்பத்தூா், ஆவடி, திருவள்ளூா் உள்ளிட்ட நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரயில் நிலையங்களில் ரூ.25.45 லட்சம் பறிமுதல்

கண்காணிப்பு கேமராக்கள், செயலிகள் மூலம் வெளிநாடுகள் கண்காணிப்பதை மறைக்கும் மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்

புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


