கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

82 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா

சென்னை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 82 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :9 ஜனவரி 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 82 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

கடற்கரை-தாம்பரம் புகா் பிரிவு மற்றும் அனைத்து பறக்கும் ரயில் நிலையங்கள் உள்பட 59 முக்கிய ரயில் நிலையங்களில் ஏற்கெனவே கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கூடுதலாக, 82 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, ஜோலாா்பேட்டை, அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்கள், பொன்னேரி, எண்ணூா், திருத்தணி, அம்பத்தூா், ஆவடி, திருவள்ளூா் உள்ளிட்ட நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.