காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ஆக்ரா: 38 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்

ஆக்ராவில் சட்டவிரோதமாக வசித்து வந்த எட்டு குழந்தைகள் உள்பட 38 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

கோப்புப்படம்.

Published On :10 ஜனவரி 2026, 9:30 pm IST

ஆக்ராவில் சட்டவிரோதமாக வசித்து வந்த எட்டு குழந்தைகள் உள்பட 38 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், சிக்கந்தரா பகுதியில் 38 வங்க தேசத்தினர் சட்டவிரோதமாக வசித்து வந்தது கடந்த 2022ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் யாரிடமும் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரிய வந்தது.

சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக 38 பேரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 38 பேரில் 23 ஆண்கள், ஏழு பெண்கள் மற்றும் எட்டு குழந்தைகள் அடங்குவர்.

ஆண்களும் பெண்களும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இன்றுடன் அவர்களின் சிறை தண்டனை முடிந்த நிலையில் 38 பேரும் நாடு கடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

வாகனங்கள் மூலம் அவர்கள் வங்கதேச எல்லைக்கு அனுப்பப்பட்டனர். ஜனவரி 13 ஆம் தேதி அவர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று உதவி காவல் ஆணையர் தினேஷ் சிங் தெரிவித்தார்.

Summary

As many as 38 Bangladeshi nationals, including eight children, were deported from Agra on Saturday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.