சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் பாஜக: இம்ராம் பிரதாப்கர்ஹி குற்றச்சாட்டு!

மத பிளவுகளால் மக்களைப் பிரிக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு பற்றி..

News image

இம்ராம் பிரதாப்கர்ஹி

Updated On :10 ஜனவரி 2026, 7:20 am

பாஜகவினர் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்த முயல்வதாகக் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இம்ராம் பிரதாப்கர்ஹி குற்றம் சாட்டியுள்ளார்.

மாநகராட்சித் தேர்தலையொட்டி நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது, விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் நிலையில், தாராவி போல மும்பையை விற்றுவிட ஒருபோதும் அனுமதிக்கப்படாது.

மும்பை மகாராஷ்டிலத்திற்குச் சொந்தமானது, அது எப்போது அந்த மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும். பாஜகவின் அரசியல் மக்களைப் பிளவுபடுத்துவதையும், அவர்களுக்குக் கல்வி மறுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

பாஜக பிளவுபடுத்தி ஆளும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெறுப்புச் சூழல் உருவாக்கப்படுகிறது. பாஜக அமைச்சர்கள் பிளவுபடுத்தும் மொழியைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் மூத்த தலைவர்கள் மௌனம் காக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

Summary

Congress's Rajya Sabha member Imran Pratapgarhi has accused the BJP of adopting a "divide and rule" policy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.