யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

எஸ்ஐஆர்! சரிபார்ப்புக்கான ஆவணமாக 10 ஆம் வகுப்பு நுழைவுச் சீட்டை ஏற்க மறுப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது பத்தாம் வகுப்பு நுழைவுச் சீட்டை சரிபார்ப்பு ஆவணமாக ஏற்க மறுப்பு

News image
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்- DIN
Updated On :15 ஜனவரி 2026, 12:55 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது பத்தாம் வகுப்பு நுழைவுச் சீட்டை சரிபார்ப்பு ஆவணமாக ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (SIR) சரிபார்ப்புக்கான ஆவணமாக பத்தாம் வகுப்பு நுழைவுச் சீட்டை (Admit Card - அட்மிட் கார்டு) ஏற்றுக் கொள்ளுமாறு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும், எஸ்ஐஆர் சரிபார்ப்புக்கான செல்லுபடியாகும் ஆவணமாக பத்தாம் வகுப்பு நுழைவுச் சீட்டை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

ஏற்கெனவே பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது ஆணைகள், வன உரிமைச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை சரிபார்ப்பு ஆவணங்களாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.