மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெற்றி பெற்றிருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் வாக்குப்பதிவு முடிந்தது. மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் தோ்தல் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்றது. இன்று (ஜன. 16) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கௌரி லங்கேஷ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ரீகாந்த் பங்கார்கர் வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2017-இல் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதில் ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்ற நபருக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

கௌரி லங்கேஷ்
இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் ஜால்னா முனிசிபல் கார்ப்பரேசனில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் பங்கார்கர் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாகக் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் தேர்தலில் போட்டியிடுவதும் வெற்றி பெறுவதும், மீண்டும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
Summary
Shrikant Pangarkar, accused in the 2017 Gauri Lankesh murder case, has won the Jalna Municipal Corporation election
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிகுந்த வரவேற்பில் கௌரி ப்ரியாவின் சென்னை லவ் ஸ்டோரி..! வசூலிலும் அசத்தல்!

கேத்தன் கொலையில் திடீர் திருப்பம்! சியா திட்டம் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த சகோதரர்?

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலை தமிழ், தெலுங்கில் பாடிய ஸ்ரீ கௌரி ப்ரியா!

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்குத் தொடா்பில்லை: வெளியுறவு அமைச்சகம்
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



