ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - கௌரி லங்கேஷ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் வெற்றி!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கௌரி லங்கேஷ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சுயேச்சையாக வெற்றி!

PTI

Published On :

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெற்றி பெற்றிருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் வாக்குப்பதிவு முடிந்தது. மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் தோ்தல் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்றது. இன்று (ஜன. 16) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கௌரி லங்கேஷ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ரீகாந்த் பங்கார்கர் வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2017-இல் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதில் ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்ற நபருக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

கௌரி லங்கேஷ்

கௌரி லங்கேஷ்

இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் ஜால்னா முனிசிபல் கார்ப்பரேசனில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் பங்கார்கர் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாகக் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் தேர்தலில் போட்டியிடுவதும் வெற்றி பெறுவதும், மீண்டும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

Summary

Shrikant Pangarkar, accused in the 2017 Gauri Lankesh murder case, has won the Jalna Municipal Corporation election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.