மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், 3 வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட நிலையில் அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றனர்.
மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் தோ்தல் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்றது.தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தாணேவில் வெவ்வேறு வார்டுகளில் களமிறங்கிய பிரஹ்லாத் மாத்ரே, அவரது குடும்பத்தைச் சேர்ந்த ரேகா மாத்ரே மற்றும் ரவீன் மாத்ரே மக்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளனர்.
பிரஹ்லாத் மாத்ரே மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டார். ரேகா மாத்ரேவோ சிவசேனை கட்சி வேட்பாளராவார். ரவீன் மாத்ரே பாஜக சார்பில் போட்டியிட்டவராவார்.
தாணே முனிசிபல் கார்ப்பரேசனில் உள்ள வார்டுகளில் வேட்பாளர்களாக களமிறங்கிய மேற்கண்ட மூவரும் வெற்றி பெற்றதாக இன்று (ஜன. 16) அறிவிக்கப்பட்டதால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியடைந்துள்ளது.
மேற்கண்ட மாத்ரே குடும்பம் மட்டுமில்லாது ஜால்கான் முன்சிபல் கார்ப்பரேசனிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது. அவர்கள் அனைவரும் சிவ சேனை கட்சி சார்பில் போட்டியிட்டவர்களாவர்.
Summary
Thane municipal corporation elections Mhatre family winning three wards by contesting on tickets of three rival parties.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உள்ளாட்சித் தோ்தலில் யாருடன் கூட்டணி? ஜி.கே.வாசன் பதில்

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக பலத்தை நிரூபிப்போம்: எடப்பாடி பழனிசாமி

மக்கள்தொகை சுய கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தோ்தலை மனதில் களப்பணியாற்றுங்கள்: கட்சி நிா்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



