மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

வங்கதேச பதற்றம்: இந்திய தூதர்களின் குடும்பத்தினர் நாடு திரும்ப உத்தரவு!

இந்திய தூதர்களின் குடும்பத்தினர் நாடு திரும்ப உத்தரவிட்டிருப்பது பற்றி...

News image

கோப்புப்படம் - ANI

Updated On :21 ஜனவரி 2026, 2:19 pm IST

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு, ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதனால் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளன.

சமீபத்தில் வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷரீஃப் உஸ்மான் ஹாதியை கொலை செய்த குற்றவாளி, இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சட்டோகிராமில் உள்ள இந்திய தூதரகம் மீது வங்கதேசத்தினர் தாக்குதல் நடத்தினர்.

மேலும், அந்நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்து மதத்தினரைக் குறிவைத்து தொடர் கொலைகள் நடைபெற்று வருகின்றன.

ஹாதியை சுட்டுக் கொன்ற கொலையாளி, தான் வளைகுடா நாட்டில் இருப்பதாக விடியோ வெளியிட்டும், வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன.

வங்கதேச வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்களின் தூதரங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளன.

இதனிடையே, அடுத்த மாதம் வங்கதேசத்தில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டுக்கான தூதரக பணியை ”நான் ஃபேமிலி போஸ்ட்”டாக (குடும்பத்தை அழைத்துச் செல்லக் கூடாது) இந்திய வெளியுறவுத் துறை மாற்றி அமைத்துள்ளது.

இதனால், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகப் பணியை ”நான் சில்ட்ரன் போஸ்ட்”டாக (குழந்தைகளைக் அழைத்துச் செல்லக் கூடாது) தான் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தூதரக ஊழியர்கள் அவர்களின் மனைவியை மட்டும் அழைத்துச் செல்லலாம்.

இதன்மூலம் பாகிஸ்தானைவிட வங்கேச தூதரகப் பணியை மத்திய அரசு கூடுதல் அச்சுறுத்தல் மிகுந்ததாக வகைப்படுத்தியுள்ளது.

Summary

Bangladesh tension: Indian diplomats' families ordered to return home!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.