நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தேநீர் விற்பவர் என பொய்ப் பிரசாரம்: பிரதமர் மோடி மீது கார்கே குற்றச்சாட்டு

ஏழைகளை ஒடுக்குவது மட்டுமே பிரதமர் மோடியின் பழக்கம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

News image

சித்திரிப்புப் படம்

Updated On :22 ஜனவரி 2026, 5:45 pm IST

ஏழைகளை ஒடுக்குவது மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் பழக்கம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

விபி ஜி ராம் ஜி-க்கு எதிரான விவசாயிகள் மாநாட்டில் கார்கே பேசுகையில், "வாக்குகளைப் பெறுவதற்காக, தன்னை ஒரு தேநீர் விற்பனையாளர் என்று அவர் (பிரதமர் மோடி) தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால், அவர் எப்போதாவது தேநீர் தயாரித்திருக்கிறாரா? எப்போதாவது மக்களுக்கு தேநீர் வழங்க தேநீர் குடுவையுடன் சுற்றியிருக்கிறாரா? இதெல்லாம் வெறும் நாடகம்; ஏழைகளை ஒடுக்குவதே அவரது பழக்கம்.

முன்னாள் பிரதமர் நேருவுக்கு கிடைத்த பெரிய திட்டங்களைப் போல, அவர்கள் (பாஜக) செய்த ஏதேனும் ஒரு வேலையைச் சொல்லுங்கள்" என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து வந்ததாகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்கள் என்றும் காங்கிரஸார் மீது பாஜக தொடர்ந்து விமர்சித்து வரும்நிலையில், பிரதமர் மோடி மீது கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

Summary

Has He Ever Made Tea?: Mallikarjun Kharge's Jab At PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.