வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அரசு தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி புயான்

News image
உஜ்ஜல் புயான்
Updated On :24 ஜனவரி 2026, 11:42 pm

தினமணி செய்திச் சேவை

‘நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்வது நீதித்துறையின் உள்விவகாரம்; இந்த நடைமுறையில் மத்திய அரசு தலையிட முடியாது’ என உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் சனிக்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லியில் உள்ள ஐஎல்எஸ் சட்டக் கல்லூரியில் ஜி.வி.பண்டிட் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் உஜ்ஜல் புயான் சனிக்கிழமை பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: நீதித்துறை நிா்வாகத்தை மேம்படுத்தவே நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இது நீதித்துறையின் உள்விவகாரம். இதில் தலையிட்டு குறிப்பிட்ட உயா் நீதிமன்றங்களுக்கு ஓா் நீதிபதியை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றோ அல்லது பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்றோ அரசு கூற முடியாது.

நீதித்துறையின் சுதந்திரம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று. இந்தியாவில் அரசமைப்புச் சட்டமே அனைத்துக்கும் மேலானது; நாடாளுமன்றம் அல்ல.

சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க ஜனநாயகத்தின் முக்கியத் தூணாக விளங்கும் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவது அவசியம் என்றாா்.