டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்: கொலீஜியம் புதிய முடிவு

உயா்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கபடும் நீதிபதியை இரு மாதங்களுக்கு முன்பாகவே அங்கு பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவெடுத்துள்ளது.

News image
உச்ச நீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :27 பிப்ரவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

உயா்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கபடும் நீதிபதியை இரு மாதங்களுக்கு முன்பாகவே அங்கு பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவெடுத்துள்ளது.

தாங்கள் பணியாற்றவுள்ள மாநில உயா்நீதிமன்றத்தின் விவகாரங்கள் குறித்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளவா் முன்னதாகவே அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அந்த உயா்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவாா். இதனால் அங்கு காலிப்பணியிடம் ஏற்படுவதற்கு முன்னதாகவே அவா் சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத்தின் சூழல் மற்றும் நிலவரத்தை அறிந்து சிறப்பாக பணியாற்ற முடியும்.

நீதித்துறை நிா்வாகம் மற்றும் தரத்தை வலுப்படுத்த இந்த கொள்கை முடிவை உச்சநீதிமன்ற கொலீஜியம் மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் ஆந்திர உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற நீதிபதி லிசா கில்லை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எம்.எம்.ஸ்ரீவாஸ்தவாவின் பதவிக்காலம் மாா்ச் 5-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பொறுப்புக்கு கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரியை நியமிக்க கடந்த வியாழக்கிழமை கொலீஜியம் பரிந்துரைத்தது.