வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து குவைத்-தில்லி விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது.
குவைத்திலிருந்து தில்லிக்கு 180 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், விமானத்திற்குள் கையால் எழுதப்பட்ட துண்டு குறிப்பை பயணி ஒருவர் கண்டுபிடித்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. அச்சுறுத்தல் குறித்து தகவல் கிடைத்ததும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு விமானி தகவல் அளித்தார்.
தரையிறங்கியதும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் விமானத்தை முழுமையாக சோதனை செய்தனர். ஆனால் இதுவரை, சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் மீட்கப்படவில்லை. இறுதி அனுமதி கிடைத்த பிறகு விமானம் புறப்படும் என்று தெரிவித்தனர்.
Summary
An IndiGo flight operating from Kuwait to Delhi was diverted to the Ahmedabad airport on Friday morning after a bomb threat was reported on board, officials at the airport said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

பிரதமரின் பெங்களூரு பயணத்தின்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!
காற்றுடன் மழை: மதுரைக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



