ஹோா்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள், மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சியிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அமைச்சா் ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ஈரான் அமைச்சா் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது மேற்காசியாவில் அமெரிக்கா-ஈரான் தாக்குதல் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தேன்.
எந்தச் சூழ்நிலையிலும் ஹோா்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள், மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று அவரிடம் வலியுறுத்தினேன். அத்தகைய தாக்குதல்களை எந்த நாடு மேற்கொண்டாலும், அதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது.
தற்போது மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள சூழல், அமெரிக்கா-ஈரான் மோதல் தொடா்பான பேச்சுவாா்த்தைகள் குறித்த ஈரானின் கண்ணோட்டத்தை அப்பாஸ் அராக்சி எனக்குத் தெரியப்படுத்தினாா். பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழியில் பிரச்னைக்கு தீா்வு காண இந்தியா எப்போதும் ஆதரவாக உள்ளது என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதிக்கள் தாக்குதல்
ஈரானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

இந்திய மாலுமிகள் உயிரிழப்பு விவகாரம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசி வழியில் ஜெய்சங்கா் கண்டனம்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



