அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

நன்கொடை முறைகேட்டில் குற்றவாளிகள் தப்ப முடியாது: யோகி ஆதித்யநாத்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் முறைகேடு பற்றி யோகி ஆதித்யநாத் கூறுவது..

News image

யோகி ஆதித்யநாத் - ANI

Updated On :26 ஜூன் 2026, 1:51 pm IST

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் முறைகேடு வெய்யதாகக் கூறப்படும் விவகாரத்தில் குற்றவாளிகள் எவரும் தப்பமுடியாது என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

டியோரியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதித்யநாத் கூறுகையில்,

மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதற்கு எதிராகத் தனது எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்திய அவர், அயோத்தி என்பது நம் அனைவரின் நம்பிக்கைக்கும் சநாதன தர்மத்திற்கும் ஒரு அடையாளமாகும்.

அயோத்தியின் மீது தவறான பாதையைச் செலுத்த வேண்டாம். ஸ்ரீ ராமரின் கண்ணியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.

சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை தொடங்கப்பட்டது. உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டை நாங்கள் வெளிக்கொண்டு வருவோம் என உறுதியளிக்கிறேன்.

பொதுமக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவது ஏற்றுக்கொள்ள முடியாது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சநாதன தர்மத்தின் நம்பிக்கையில் யார் தலையிட்டாலும் அவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். யாருக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படாது என்று அவர் எச்சரித்தார்.

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பான வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் முதற்கட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினர் கிருஷ்ண மோகன் அளித்த புகாரின் பேரில் இந்த எப்ஃஐஆர் பதிவு செய்யப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எங்கள் காவலில் உள்ளதாகவும், வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என அயோத்தி மூத்த காவல் கண்காணிப்பாளர் கௌரவ் குரோவர் தெரிவித்தார்.

Action began immediately after SIT report: Adityanath after arrests in Ram temple donation case .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.