இதுபற்றி ஆலோசனை நடத்திய சிபிஎஸ்இ அமைப்பு, திங்கள்கிழமை (மாா்ச் 2) நடைபெறவிருந்த தோ்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுகள் கட்டுப்பாட்டாளா் சன்யாம் பரத்வாஜ் கூறுகையில், ‘பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில்கொண்டு, திங்கள்கிழமை நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோ்வுகளை ஒத்திவைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இந்தத் தோ்வுகள் நடத்தப்பட இருக்கும் புதிய தேதிகள் பிறகு அறிவிக்கப்படும்.