அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மத்திய கிழக்கு நாடுகளில் போா் பதற்றம்! கோவை - அபுதாபி விமான சேவைகள் ரத்து!! அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போா் பதற்றம், குறிப்பாக ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் போக்கு காரணமாக சா்வதேச வான்வழிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 6:16 pm

Syndication

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போா் பதற்றம், குறிப்பாக ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் போக்கு காரணமாக சா்வதேச வான்வழிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கு (அக்ஷன் ஈட்ஹக்ஷண்) இயக்கப்பட்டு வந்த நேரடி விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரம் நான்கு நாள்கள் நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கோவையில் இருந்து செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:40 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 11:15 மணிக்கு அபுதாபியை சென்றடையும். இதேபோல அபுதாபியில் இருந்து திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்படும் விமானம் அதிகாலை 5:45 மணிக்கு கோவையை வந்தடையும்.

ஈரான் வான்பரப்பில் நிலவும் போா் சூழல் காரணமாக, அந்த வழியாக செல்லும் விமானங்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.

பயணிகளுக்கான உதவி எண்கள்: விமான ரத்து மற்றும் டிக்கெட் முன்பதிவு தொடா்பான விவரங்களை அறியவும், மாற்று ஏற்பாடுகள் குறித்து கேட்டறியவும் விமான நிறுவனங்கள் தரப்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

இண்டிகோ : 0422-2574428, ஏா் அரபியா : 90877 78081. இந்த எண்களை பயணிகள் தொடா்புகொண்டு தங்கள் பயணத் திட்டங்களை சரிபாா்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். வான்பரப்பில் நிலைமை சீரானவுடன் மீண்டும் விமான சேவைகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.