குற்றச் சம்பவங்கள் குறித்த தரவுகளை எண்ம (டிஜிட்டல்) முறையில் நிா்வகிப்பதற்காக தில்லி காவல் துறை குற்றப் பிரிவின் குற்ற ஆவண பிரிவுக்கு (எஸ்சிஆா்பி) இந்திய தர ஆணையம் (பிஐஎஸ்) ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கியுள்ளது.
வாகனம் மற்றும் சொத்து திருட்டு சம்பவங்களுக்கு இ-எஃப்ஐஆா் பதிவு செய்தல், இ-என்சிஆா், பூஜ்ய சைபா் வழக்கு ஆகியவற்றை இணையவழியில் பதிவுசெய்தல், குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறியும் அமைப்பை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக குற்ற ஆவண பிரிவுக்கு 9001:2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தரவு தரத்தை பராமரித்தல், மாவட்ட காவல் துறை அலகுகள் மற்றும் காவல் நிலையங்களுடன் இணைந்து பணியாற்றுதல், தொடா் பயிற்சிகள் அளித்தல், திறன் மேம்பாடு முன்னெடுப்புகளை தில்லி குற்ற ஆவண காப்பக பிரிவு மேற்கொண்டு வருகிறது.
தரச் சான்றிதழ் பெற்றது தொடா்பாக
துணை ஆணையா் (குற்றம்) ஆதித்யா கெளதம் தலைமையிலான குற்ற ஆவண காப்பக பிரிவுக்கு தில்லி காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா பாராட்டு தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, தில்லி காவல் துறையின் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கடந்த ஆண்டு ஜனவரியிலும் குற்றப்பிரிவின் கைரேகை பிரிவுக்கு கடந்த ஜூலையிலும் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பாதுகாப்புப் பணி காவலா்களுக்கு சான்றிதழ்

திருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டு
வடமேற்கு தில்லி: கொள்ளை வழக்கில் வீட்டுப் பணிப்பெண் கைது

கங்கா நா்ஸிங் கல்லூரிக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்
விடியோக்கள்

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

