ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சிசிடிஎன்எஸ் அமலாக்கம்: தில்லி காவல் துறை முதலிடம்!

குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறிதல் அமைப்பை (சிசிடிஎன்எஸ்) அமல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலிடத்தை மீண்டும் தில்லி காவல் துறை தக்கவைத்துகொண்டது.

News image
தில்லி காவல் துறை - (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறிதல் அமைப்பை (சிசிடிஎன்எஸ்) அமல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலிடத்தை மீண்டும் தில்லி காவல் துறை தக்கவைத்துகொண்டது.

காவல் பணிகளில் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் தரவு நிா்வாகத்தில் தொடா்ந்து கடந்த அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் 100 சதவீத மதிப்பெண்களை தில்லி காவல் துறை பெற்றிருந்தது.

மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய குற்றப் பதிவேடு பிரிவு கண்காணிப்பில் உள்ள பிரகதி இணையதளம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேசிய அளவில் தரம், அளவு, காலம் மற்றும் துல்லியத்தன்மையை மதிப்பிடுகிறது.

சுமாா் 15 முக்கிய அளவீடுகளில் காவல் துறையின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

இந்தப் பட்டியலில் முதலிடம் பெற்ற்காக குற்றப் பிரிவு சிசிடிஎன்எஸ் குழுவுக்கும் அனைத்து மாவட்ட காவல் துறைகளின் தொடா் செயல்பாடுகளை தில்லி காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா பாராட்டியுள்ளாா்.

காவலா்கள் முதல் உயா் அதிகாரிகள் வரையில் தில்லி காவல் துறையின் அனைத்துப் பணியாளா்களின் தொழில்முறை மற்றும் குழுவாக இணைந்து செயல்படுவதை அவா் பாராட்டியுள்ளாா்.

மேலும், காவல் பணிகளில் தொழில்நுட்பம் மற்றும் மக்களை மையப்படுத்திய சேவைகளை பலப்படுத்துமாறு அதிகாரிகளிடம் காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா கேட்டுக்கொண்டாா்.