திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சட்டவிரோத கத்திகளை விற்றதாக "பிளிங்கிட்' மீது வழக்கு

சட்டவிரோத கத்திகளை விற்றதாகக் கூறி உடனடி டெலிவரி செயலியான பிளிங்கிட் மீது தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

News image

பிளிங்கிட் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு - (கோப்புப் படம்)

Updated On :18 பிப்ரவரி 2026, 2:26 pm

நமது நிருபர்

சட்டவிரோத கத்திகளை விற்றதாகக் கூறி உடனடி டெலிவரி செயலியான பிளிங்கிட் மீது தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பிளேடு அளவு மற்றும் விவரக் குறிப்புகளை ஒழுங்குபடுத்தும் அரசு அறிவிப்புகளை மீறிய விற்பனைக்கு கிடைத்த 50 கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகபட்ச பிளேடு நீளம் 7.62 செமீ மற்றும் 1.72 செமீ அகலம் வரை உள்ள பொருள்கள் விதிகளின்படி அனுமதிக்கப்படுகின்றன. அதற்கு மேல் உள்ள எதுவும் சட்டவிரோதமானது. இந்த விஷயத்தில் பிளிங்கிட்டிடமிருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.

பரிந்துரைக்கப்பட்ட விவரக்குறிப்புகளை மீறிய கத்திகள் இணைய தளத்தின் மூலம் விற்கப்படுவதை போலீஸார் கண்டறிந்ததை அடுத்து பிப்.14- ஆம் தேதி ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆய்வு செய்தபோது, டெலிவரி செயலி மூலம் "ஸ்டான்லி கத்தி' ஒன்றை ஆர்டர் செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டது.

சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, போலீஸôர் ஒரு ஆர்டரை வழங்கி, விநியோகத்திற்குப் பிறகு கத்தியை ஆய்வு செய்தனர். கத்தி கைமுறையாக மடிக்கக் கூடியதாகவும், அனுமதிக்கப்பட்ட பரிமாணங்களை மீறியதாக உள்ளதும் கண்டறியப்பட்டது. இந்த கத்தி 8 சென்டிமீட்டர் நீளமும் 2.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது.

இது சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது. இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. பிப்.15- ஆம் தேதி தில்லி முழுவதும் செயலி மூலம் இணைக்கப்பட்ட பல கடைகளில் போலீஸ் குழுக்கள் சோதனைகளை நடத்தி, 16 சட்டவிரோத கத்திகளை பறிமுதல் செய்தன.

பிப்.16- ஆம் தேதி போலீஸார் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்தி, குருகிராமின் ஃபரூக்நகரில் அமைந்துள்ள ஒரு கிடங்கில் சோதனையிட்டனர். அங்கு மேலும், 32 சட்டவிரோத கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட கத்திகள் 50 ஆக இருந்தது.

விநியோகச் சங்கிலிகள், கொள்முதல் ஆதாரங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருள்களை சேமித்து வைப்பதற்கும் விநியோகிப்பதற்கும் பொறுப்பான தனிநபர்களின் பங்கு குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம் என்றார் அவர்.

Summary

The Delhi Police have registered a case against the company for selling banned knives through the Blinkit app.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.