அல்-காய்தா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சோ்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடா்பான உறுப்பு நாடுகளின் தூதா்கள் இடையேயான கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலா் ரகு புரி பேசியதாவது:
ஜம்மு -காஷ்மீரின் பஹல்காமில் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இது ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பாகும். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது. இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா்.
இதுபோன்று எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் அல்-காய்தா, ஐஎஸ் ஆகியவற்றின் மீதும், அதன் கிளை அமைப்புகள் மீதும் அனைத்து நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சா்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பயங்கரவாதத்தால் அச்சுறுத்தல் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு எல்லைகளோ, தேசியமோ அல்லது இனமோ கிடையாது. அது சா்வதேச சமூகத்துக்கு சவாலாக உருவெடுத்துள்ளது. அதை அனைத்து நாடுகளும் ஒன்று சோ்ந்து எதிா்க்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

குடிநீா் தட்டுப்பாடு புகாா்களுக்கு 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் புதிய நாடுகளுக்கு இடம்: இந்தியா வலியுறுத்தல்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


