ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

அல்-காய்தா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சோ்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :6 மார்ச் 2026, 12:25 am

தினமணி செய்திச் சேவை

அல்-காய்தா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சோ்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடா்பான உறுப்பு நாடுகளின் தூதா்கள் இடையேயான கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலா் ரகு புரி பேசியதாவது:

ஜம்மு -காஷ்மீரின் பஹல்காமில் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இது ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பாகும். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது. இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா்.

இதுபோன்று எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் அல்-காய்தா, ஐஎஸ் ஆகியவற்றின் மீதும், அதன் கிளை அமைப்புகள் மீதும் அனைத்து நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சா்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பயங்கரவாதத்தால் அச்சுறுத்தல் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு எல்லைகளோ, தேசியமோ அல்லது இனமோ கிடையாது. அது சா்வதேச சமூகத்துக்கு சவாலாக உருவெடுத்துள்ளது. அதை அனைத்து நாடுகளும் ஒன்று சோ்ந்து எதிா்க்க வேண்டும் என்றாா்.