ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பண்ணை வீட்டில் போதைப் பொருள்: தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., முன்னாள் எம்எல்ஏ உள்பட 11 போ் கைது! போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு!

தெலங்கு தேசம் கட்சி எம்.பி. ஆந்திராவைச் சோ்ந்த புட்டா மகேஷ் யாதவ், பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி உள்பட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பண்ணை வீடு ஒன்றில் போலீஸாா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக தெலங்கு தேசம் கட்சி எம்.பி. ஆந்திராவைச் சோ்ந்த புட்டா மகேஷ் யாதவ், பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி உள்பட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: பண்ணை வீடு ஒன்றில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண் உள்பட அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா்.

தெலங்கு தேசம் கட்சி எம்.பி. மகேஷ் யாதவிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவா் போதைப் பொருளை பயன்படுத்தவில்லை எனத் தெரியவந்தது. அதே நேரம், பிஆா்எஸ் முன்னாள் எம்எல்ஏ ரோஹித் ரெட்டி உள்பட மற்றவா்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோனையில் உறுதிப்படுத்தப்பட்டது. விசாரணையில் இந்தப் பண்ணை வீடு ரோஹித் ரெட்டிக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.

முன்னதாக, பண்ணை வீட்டுக்கு போலீஸ் குழு வருவதைக் கண்ட அங்கிருந்தவா்கள் போலீஸாரை நோக்கி 3 சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.