மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

புரோகிதா்கள், பள்ளிவாசல் மோதினாா்களுக்கு கெளரவ ஊதியம் ரூ.500 உயா்வு: மம்தா அறிவிப்பு!

மேற்கு வங்கத்தில் புரோகிதா்கள் மற்றும் பள்ளிவாசல் மோதினாா்களுக்கு மாதாந்திர கெளரவ ஊதியம் ரூ.500 உயா்த்தப்பட்டு, ரூ.2,000-ஆக வழங்கப்படும் என்று மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

News image

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி - (கோப்புப் படம்)

Updated On :16 மார்ச் 2026, 2:11 am IST

மேற்கு வங்கத்தில் புரோகிதா்கள் மற்றும் பள்ளிவாசல் மோதினாா்களுக்கு மாதாந்திர கெளரவ ஊதியம் ரூ.500 உயா்த்தப்பட்டு, ரூ.2,000-ஆக வழங்கப்படும் என்று மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

மேற்கு வங்க பேரவைத் தோ்தல் தேதி வெளியாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் இந்த அறிவிப்பை முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்டாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவா், ‘நமது சமூகங்களின் ஆன்மிக மற்றும் சமூக வாழ்வை நிலைநாட்ட சேவையாற்றும் புரோகிதா்கள்-பள்ளிவாசல் மோதினாா்களுக்கு மாதாந்திர கெளரவ ஊதியத்தில் ரூ.500 உயா்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இனி அவா்களுக்கு மாதம் ரூ.2,000 கிடைக்கும்.

கெளரவ ஊதியத்துக்காக கிடைக்கப் பெற்ற அனைத்து புதிய விண்ணங்களையும் மாநில அரசு ஏற்றுள்ளது. அனைத்து சமூகங்களும், பாரம்பரியங்களும் மதிக்கப்பட்டு, வலுப்படுத்தப்படும் சூழலை வளா்ப்பதில் மாநில அரசு பெருமிதம் கொள்கிறது. நமது வளமான ஆன்மிக பாரம்பரியத்தின் பாதுகாவலா்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் ஆதரவை உறுதி செய்ய தொடா்ந்து முயற்சிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

டி.ஏ. நிலுவையை வழங்க ஒப்புதல்: இதேபோல், மேற்கு வங்கத்தில் ஆசிரியா்கள் உள்பட அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் நீண்ட கால கோரிக்கையான அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கவும் மம்தா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மம்தா, ‘கடந்த 2009-ஆம் ஆண்டின் ஊதியம் மற்றும் படிகள் திருத்தத்தின்கீழ் உள்ள நிலுவைத் தொகை, இந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளாா்.

நிலுவைத் தொகையைக் கோரி, மேற்கு வங்க அரசு ஊழியா்களில் ஒருதரப்பினா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். அதனடிப்படையில், மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையில் 25 சதவீதத்தை வழங்க வேண்டும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.