அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி! மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை! மீனவர்கள் கலக்கம்
/

வெளி மாநில வாக்காளர்களைச் சேர்க்கும் பாஜகவினர்! தேர்தல் ஆணையத்துக்கு மமதா கடிதம்!

தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மமதா பானர்ஜி கடிதம்...

News image

மமதா பானர்ஜி

IANS

Updated On :31 மார்ச் 2026, 11:10 am

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வெளி மாநில வாக்காளர்களைச் சேர்க்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருவதாக முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்திற்கு ஏப். 23, 29 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

அங்கு எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்பட்டது முதலே அதற்கு முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாகவும் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத்தவர்களைச் சேர்க்க பாஜகவினர் முயற்சி செய்தது தெரிய வந்துள்ளதாகவும் படிவம் 6 மூலமாக ஆயிரக்கணக்கான போலி படிவங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

"இந்தியத் தேர்தல் ஆணையம், பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறது. பாஜகவும் தேர்தல் ஆணையமும் ஜனநாயக, அரசியலமைப்பு உரிமைகளைப் பறித்து வருகின்றன. வாக்காளர் பட்டியலில் சிலரை மட்டும் குறித்துவைத்து நீக்குகிறார்கள். அதேபோல மேற்குவங்கத்தில் வசிக்கத்தவர்கள் படிவம் 6 மூலமாக சேர்க்கப்படுகிறார்கள். இது மிகவும் ஒரு மோசமான சதி.

மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தவர்களைச் சேர்ப்பதற்காக, ஆயிரக்கணக்கான மோசடியான படிவம் 6 விண்ணப்பங்களை பாஜக தொண்டர்கள் சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 60 லட்சத்திற்கும் அதிகமான உண்மையான வாக்காளர்களின் விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. ஆனால் சந்தேகத்திற்குரிய விண்ணப்பங்கள் விரைந்து ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மீதான நேரடித் தாக்குதல்" என்று குற்றம்சாட்டிய அவர் இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையம் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.