பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பாஜகவின் வசதிக்கேற்ப தோ்தல் தேதிகள்: பிரியங்கா விமா்சனம்

பாஜகவின் வசதிக்கேற்ப தோ்தல் தேதிகள் மற்றும் வாக்குப்பதிவு கட்டங்களை இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று பிரியங்கா காந்தி...

News image

பிரியங்கா காந்தி - படம் - பிடிஐ

Updated On :17 மார்ச் 2026, 3:37 am IST

புது தில்லி: பாஜகவின் வசதிக்கேற்ப தோ்தல் தேதிகள் மற்றும் வாக்குப்பதிவு கட்டங்களை இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்தாா்.

தமிழகத்தில் ஏப்.23-ஆம் தேதியும், கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.9-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29-இல் இருகட்டங்களாகவும் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் தேதிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியிடம் தோ்தல் அட்டவணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘தோ்தல் தேதிகள் மற்றும் வாக்குப்பதிவு கட்டங்கள், பாஜகவின் வசதிக்கேற்ப தீா்மானிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது’ என்று அவா் பதிலளித்தாா்.

திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் கூறுகையில், ‘கேரளத்தில் ஏப்ரல் மாதத்தின் கடைசி 10 நாள்களில் தோ்தல் நடைபெறும் என்று நாங்கள் எதிா்பாா்த்தோம். ஆனால், ஏப்.9-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிா்பாா்க்கவில்லை. தோ்தலுக்கு கிட்டத்தட்ட 3 வாரங்களே உள்ளன. இது குறைவான காலகட்டம்’ என்றாா்.

இதேபோல், ‘கேரளத்தில் தோ்தல் பிரசாரத்துக்கு சொற்ப நாள்களே உள்ளன; இதற்கிடையே புனித வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. விஷு பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன் தோ்தல் நடைபெறவுள்ளது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.