தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்...

News image

மு.க. ஸ்டாலினுடன் ராகுல் (கோப்புப் படம்) - ENS

Updated On :11 ஏப்ரல் 2026, 7:48 am

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை(ஏப். 12) தமிழகம் வரவுள்ளதாகவும் நாளை மாலை தூத்துக்குடியில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் தலைவர்களும் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளனர்.

ராகுல் காந்தி வருகை

இந்நிலையில் தமிழக பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு 3 வாரங்கள் ஆகியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்னும் தமிழகம் வரவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. கடந்த வாரம் புதுவை வந்த அவர், தமிழகத்திற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் ராகுல் காந்தி நாளை(ஏப். 12,ஞாயிறு) தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை காலை தில்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளதாகவும் அப்பகுதியில் சாலை வலம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே மேடையில் ஸ்டாலினும் ராகுலும்...

பின்னர் தூத்துக்குடியில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் ராகுல் காந்தியும் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே முதல்வர் மு.க. ஸ்டாலின், நாளை(ஏப். 12, ஞாயிறு) மாலை 4 மணிக்கு பரமக்குடியிலும் இரவு 7 மணிக்கு தூத்துக்குடியிலும் பிரசாரம் செய்கிறார். இரவு 7 மணி தூத்துக்குடி பிரசாரத்தில் ராகுல் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

பின்னர் ஏப். 15, 16 தேதிகளிலும் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தமிழகம் வரவுள்ளனர்.

மோடி வருகை

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப். 15 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் அவர், நாகர்கோவில் வேப்பமூடு - வடசேரி வரை சாலை வலம் நடத்துகிறார். பின்னர் ஏப். 18 ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி கோவை பொதுக் கூட்டப் பிரசாரத்தில் கலந்துகொள்கிறார்.

முன்னதாக, ஏப். 13 ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாக உரையாற்றுகிறார். அதேபோல பாஜக தலைவர்கள் பலரும் தமிழகம் வரவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வரவுள்ளதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் ஏப். 21 ஆம் தேதியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

Summary

Rahul Gandhi arrives in Tamil Nadu tomorrow April 12

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.