/

ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் நிகழ்வில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி..

News image

ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி - PTI

Updated On :11 ஏப்ரல் 2026, 5:21 am

மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாளையொட்டி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துரையாடினர்.

Story image

தில்லியில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜோதிபா புலேவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Story image

PTI

முன்னதாக, நிகழ்விடத்திற்கு வந்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். மிகவும் இயல்பாக இருவரும் பேசிக்கொண்டனர்.

Story image

அரசியல்ரீதியாக பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் இரு தலைவர்களும் பேசிக்கொண்டது இணையத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதேபோல மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோருடனும் ராகுல் காந்தி பேசினார்.

PM Modi interacts with Rahul gandhi in parliament on Mahatma Jyotiba Phule 200th birth anniversary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.