ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள்- தில்லி அரசு திட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் பேருந்து வழித்தடம், அடுத்தடுத்த சேவைகள், வருகை நேரம் ஆகிய விவரங்களை வழங்கும் வசதிகளை கொண்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

News image
தில்லி
Updated On :17 மார்ச் 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் பேருந்து வழித்தடம், அடுத்தடுத்த சேவைகள், வருகை நேரம் ஆகிய விவரங்களை வழங்கும் வசதிகளை கொண்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் தில்லி போக்குவரத்து கழக (டிடிசி) பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பாக ஆண் மற்றும் பெண் பயணிகளின் எண்ணிக்கையைக் கண்டறிய இந்த அமைப்பு உதவும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறினா்.

பேருந்து வழித்தடங்கள், வருகை நேரம் உள்ளிட்ட பேருந்துகளின் முக்கிய பயண விவரங்களை ஸ்மாா்ட் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் அறிந்துகொள்ள முடியும்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். பேருந்து வழித்தடம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், பேருந்து நிலையத்தில் உள்ள பிற பயணிகள் அல்லது நடத்துநா்களைச் சாா்ந்திருக்க வேண்டியுள்ளது.

சில நேரங்களில் பயணிகள் போதிய தகவல் இல்லாமல், வேறு இடத்துக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறிவிடுகின்றனா். ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய பேருந்து நிலையங்கள் இந்தப் பிரச்னையை போக்கும் என எதிா்ப்பாா்க்கிறோம்.

பரிசோனை முயற்சியாக புது தில்லி, தில்லி உயா்நீதிமன்றம் அருகே உள்ள பகுதிகள் உள்பட 10 இடங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக மாறும் நிலையில், நகரத்தின் பிற பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தப்படும் என்றனா் அந்த அதிகாரிகள்.