ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்து: இந்தியா - யூஏஇ தலைவர்கள் பேச்சு!

ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய இந்தியா - யூஏஇ இணைந்து செயல்பட முடிவு!

News image
ஹோர்முஸ் நீரிணை- AP
Updated On :17 மார்ச் 2026, 4:47 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (யூஏஇ) இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன. இன்று(மார்ச் 17) அமீரக அதிபர் எச். எச். ஷேக் முகமது பின் ஸாயெத் அல் நயனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அந்நாட்டு மக்களுக்கு அவர் ஈகைத் திருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியா - யூஏஇ இருநாட்டுத் தலைவர்களும் மேற்காசியாவின் இப்போதைய சூழல் குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூஏஇ மீதான அனைத்து தாக்குதல்களையும் அதனால் ஏற்பட்ட அப்பாவி மக்களின் உயிரிழப்புகளையும் பொதுச்சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களையும் இந்தியா வன்மையாகக் கண்டிப்பதை மீண்டுமொருமுறை யூஏஇ தலைமையிடம் பிரதமர் வலியுறுத்தினார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை இந்தியா - யூஏஇ ஆமோதித்தன.

நாங்கள் அப்பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைந்து திரும்பக் கொண்டுவர நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப். 28முதல் தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் படைகளின் எதிர்வினை ஆகியவற்றால் மேற்காசிய பிராந்தியத்தில் பெரும்பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை தற்காலிக மூடல் காரணமாக கடந்த இரு வாரங்களாக பாரசீக வளைகுடா பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் பல நாடுகளின் சரக்கு கப்பல்களும் ஸ்தம்பித்து நின்றன. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (யூஏஇ) இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன.

summary

President of the UAE Prime Minister Narendra Modi discussed the current situation in West Asia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.