மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஹோா்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 10:48 pm

ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திங்கள்கிழமை வலியுறுத்தியது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் ஹோா்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நீா்வழிப் போக்குவரத்து பாதுகாப்பு தொடா்பாக பஹ்ரைன் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற பொது விவாதத்தில் பங்கேற்று ஐ.நா.வுக்கான இந்திய தூதா் யோஜ்னா படேல் பேசியதாவது: ஹோா்முஸ் நீரிணையில் அண்மையில் வணிகக் கப்பல்கள் மற்றும் அப்பாவி மாலுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு இந்தியா கண்டனத்தை பதிவு செய்கிறது.

இதுபோன்ற தாக்குதல்களால் இந்திய மாலுமிகள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயணிப்பதை விரைவில் உறுதிப்படுத்த வேண்டும். உலகப் பொருளாதாரத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்துக்கு சா்வதேச சட்டங்களின்படி உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என்றாா்.