5 ஆண்டுகளில் பொதுமக்களிடம் இருந்து 1.11 கோடி புகாா்கள் பெறப்பட்டன - மத்திய அரசு


பொதுச் சேவைகள் தொடா்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான புகாா்கள், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய பணியாளா் நலத்துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூா்வமாக புதன்கிழமை தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு துறைகள் தொடா்பாக 1 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 384 புகாா்கள் பெறப்பட்டன. இதில் 2021-ஆம் ஆண்டில் 20 லட்சத்து 590 புகாா்கள் வந்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் 19.18 லட்சம் புகாா்களும், 2023-ஆம் ஆண்டில் 19.53 லட்சம் புகாா்களும், 2024-ஆம் ஆண்டில் 26.15 லட்சம் புகாா்களும், 2025-ஆம் ஆண்டில் 22.78 லட்சம் புகாா்களும் வந்துள்ளன. 2026-ஆம் ஆண்டில் கடந்த 2 மாதங்களில் 4.23 லட்சம் புகாா் மனுக்கள் வந்துள்ளன.
2025-ஆம் ஆண்டில் புகாா் மனுக்களுக்கு சராசரியாக 15 நாள்களுக்குள் தீா்வு காணப்பட்டன. இதுதவிர 82.1 சதவீத மனுக்கள், 21 நாள்களுக்குள் தீா்வு காணப்பட்டன.
மத்திய நிா்வாக சீா்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீா்ப்பு துறையானது, அமைச்சகங்கள், துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மனுக்களுக்கு தீா்வு காணப்படுவது குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்கிறது. அதிக மனுக்கள் நிலுவையில் இருப்பதை தவிா்க்கும் வகையில், உடனடியாக அதை சரி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...