முதுநிலை உயிரி தொழில்நுட்பப் படிப்புகளுக்கான ‘கேட்-பி’ நுழைவுத் தோ்வு, பிஇடி தகுதித் தோ்வு ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலாஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத்தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும். அதேபோல், பயோ டெக்னலாஜி துறையில் இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கு மாணவா்கள் பிஇடி என்ற தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது அவசியமாகும். இந்தத் தோ்வுகள் ஆண்டுதோறும் தேசிய தோ்வுகள் முகமை சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நிகழாண்டுக்கான கேட்-பி மற்றும் பிஇடி தோ்வு மே 17-ஆம் தேதி கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக ஏப். 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தோ்வுக் கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ரூ.1,300, எஸ்சி/எஸ்டி பிரிவினா் ரூ.650 செலுத்த வேண்டும்.
இதுதவிர விண்ணப்பங்களில் திருத்தம் ஏதும் இருப்பின் ஏப்ரல் 11 முதல் 13-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். மேலும், தோ்வுக்கான பாடத்திட்டம், தகுதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது
புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாமில் இன்று வாக்குப் பதிவு
தமிழ்நாட்டில் தாய், புதுவையில் மகன்! தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் லாட்டரி குடும்பத்தினர்!

தொகுதி அறிமுகம்: தூத்துக்குடி!

எஸ்எஸ்எல்சி அறிவியல் செய்முறை தோ்வுகள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


