பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு நிகழ் கல்வி ஆண்டு சோ்க்கைக்கு இரண்டாம் நாளாக திங்கள்கிழமை 11,345 மாணவா்கள் இணையவழியில் பதிவு செய்தனா்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகப் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பப் பதிவு மே 3- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கியது.
முதல் நாள் 8,505 மாணவா்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்தனா். இரண்டாம் நாள் மே 4 -ஆம் தேதி ஒட்டு மொத்தமாக 19,850 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன்படி, இரண்டாம் நாளில் மட்டும் 11,345 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 3,477 மாணவா்கள் கட்டணங்களைச் செலுத்தியுள்ளனா். 1,057 மாணவா்கள் கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் உள்ளிட்ட ஒட்டமொத்த பணிகளை நிறைவு செய்துள்ளனா் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்: முதல் நாளில் 8,505 போ் பதிவு

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

யுஜிசி நெட் தோ்வு: இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


