செய்யறிவு மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தைச் சித்திரித்து தவறாக வழிநடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் பிரதமர் மோடியின் படத்தைச் சித்திரித்து, அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, தவறான தகவல்களைப் பரப்பி தவறாக வழிநடத்தியதாகவும், பிரதமர் குறித்த ஏற்கத்தகாத படங்களைப் பதிவிட்டு, பொது ஒழுங்கைச் சீர்குலைப்பதாக காவல்துறையில் புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து, தில்லி காவல்துறையின் நடத்திய விசாரணையில், பிகாரை சேர்ந்த ஒருவர்தான் தவறாக வழிநடத்துவது தெரிய வந்தது.
இதனையடுத்து, உள்ளூர் போலீஸாருடன் இணைந்து நடத்திய விசாரணையில் ஏஐ படங்களைச் சித்திரித்து வெளியிட்டது சித்தநாத் குமார் என்பது தெரிய வந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, பாஜக பெண் எம்எல்ஏ மற்றும் வெளிநாட்டு பெண் தலைவர் ஒருவரையும் சித்தநாத் குமார் தவறாக சித்திரித்து வெளியிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், சித்தநாத்தை கைது செய்த போலீஸார், மேல் விசாரணைக்காக அவரை தில்லிக்கு அழைத்துச் சென்றனர்.
Summary
Delhi Police arrests Bihar man for sharing AI-generated obscene images of PM Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாசிக் டிசிஎஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நிதா கான் கைது!
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ உதவுவதாகக் கூறிய பிகார் நபர் கைது!

பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு


