கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீா் மக்கள் நன்கொடை

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீா் மக்கள் நன்கொடை அளித்துள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீா் மக்கள் நன்கொடை அளித்துள்ளனா்.

ரமலான் பண்டிகைக்குப் பின்னா், காஷ்மீா் பள்ளத்தாக்கில் முஸ்லிம் மதத்தின் ஷியா பிரிவு மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாக சென்று நன்கொடை வசூலித்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த ஐஜாஸ் அகமது கூறுகையில், ‘இஸ்ரேலால் ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள போரால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு துன்புறத்தலை அனுபவித்து வரும் மக்களுக்கு நாகரிக உலகம் குறைந்தபட்சம் உதவி செய்ய வேண்டும்’ என்றாா்.

இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகள் கூறுகையில், ‘நன்கொடை அளித்தவா்கள், குறிப்பாக பெண்கள் தங்க ஆபரணங்கள், செம்பு பாத்திரங்கள் மற்றும் பிற வீட்டு உபயோக பொருள்களை அளித்தனா். சில குடும்பங்கள் கால்நடைகளையும் அளித்தன.

சிறாா்களும் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை அளித்தனா். பட்காம், பாரமுல்லா பகுதிகளில் இருந்து நன்கொடை அளிக்கப்பட்டது’ என்று தெரிவித்தனா்.

காஷ்மீா் மக்கள் அளித்த நன்கொடையின் புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் பகிா்ந்து, இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘மனிதாபிமான உதவி மூலம் ஈரான் மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் காஷ்மீா் மக்களுக்கு நன்றி. அவா்களின் அன்பு மற்றும் மனிதாபிமானத்தை எப்போதும் ஈரான் மறக்காது. இந்தியாவுக்கு நன்றி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.