மேற்காசியப் போர் நிலவரம் குறித்து பாதுகாப்புப் படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(மார்ச் 24) ஆலோசனை மேற்கொண்டார்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலகம் முழுவதும் பதற்றம் மற்றும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் எழுந்துள்ளன.
ஈரானின் ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் பாதிப்பு, அதனால் சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்காசியப் போர் நிலவரம் குறித்து தில்லியில் முப்படைத் தலைமைத் தளபதி அனில் சௌஹான், தரைப் படை, கடற் படை, விமானப் படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்தும் இந்தியாவின் பாதுகாப்புத் தன்மையை மறுஆய்வு செய்யும் நோக்கிலும் இந்த கூட்டம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Iran war: Defence Minister Rajnath Singh chairs a review meeting with CDS General Anil Chauhan, the three service chiefs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் போர்: மக்கானா ஏற்றுமதி பாதிப்பு! ஒரு மாதத்தில் ரூ.500 கோடி இழப்பு!

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war

ஈரான் போர் எதிரொலியா? முட்டை விலை கடும் வீழ்ச்சி!
ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


