மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி!

காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி பற்றி..

News image

ஃபிரிட்ஜ் - பிரதி படம் - ANI

Updated On :31 மார்ச் 2026, 7:29 am

விசாகப்பட்டினம்: இந்திய கடற்படையில் பணியாற்ற வரும் அதிகாரி, செல்ஃபோன் செயலி மூலம் நட்பான பெண் தொழியை கொன்று, உடலை ஃபிரிட்ஜில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குற்றவாளி, சிந்தடா ரவீந்திரா என்ற கடற்படை அதிகாரி, ஏற்கனவே திருமணமான நிலையில் 31 வயதான பொளிப்பள்ளி மௌனிகா என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். சிந்தடாவின் மனைவி, தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மௌனிகா, வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மௌனிகாலைவ சிந்தடா கொலை செய்திருக்கிறார். பிறகு, ஆன்லைன் செயலி மூலம் கத்தியை ஆர்டர் போட்டு வரவழைத்து, மௌனிகா உடலை மூன்று துண்டுகளாக வெட்டியிருக்கிறார். தலை மற்றும் கை, கால்களை எடுத்துக் கொண்டு வனப்பகுதியில் எரித்திருக்கிறார். உடலை ஃபிரிட்டிஜில் வைத்திருந்துள்ளார்.

பிறகு, அச்சமடைந்து காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து ஃபிரிட்ஜில் இருந்த உடலையும், வனப்பகுதிக்குச் சென்று பாதி எரிந்த நிலையில் இருந்த தலையையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு டேட்டிங் செயலி மூலம், கொலையாளிக்கு, மௌனிகா அறிமுகமாகியிருக்கிறார். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிந்தடா ஏமாற்றியிருக்கிறார். ஆனால், 2024ஆம் ஆண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை மௌனிகா அறிந்ததாகவும், இது பற்றி மனைவியிடம் கூறிவிடுவேன் என மிரட்டி, 3.5 லட்சம் ரூபாய் வரை சிந்தடாவிடம் வாங்கியிருப்பதாகவும் மேலும் பணம் கேட்டு வாக்குவாதம் நடந்ததால் கொலை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Summary

About the naval officer who killed his girlfriend and hid her in the fridge..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.