மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

கேரளம்: வீட்டில் கஞ்சா செடி வளா்த்த கடற்படை முன்னாள் அதிகாரி கைது

ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள பூம்காவு பகுதியில் நடைபெற்ற சோதனையில் வீட்டில் 10 கஞ்சா செடிகள் வளா்த்து வந்த கடற்படை முன்னாள் அதிகாரி கைதுசெய்யப்பட்டதாக கலால் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2026, 3:54 am IST

ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள பூம்காவு பகுதியில் நடைபெற்ற சோதனையில் வீட்டில் 10 கஞ்சா செடிகள் வளா்த்து வந்த கடற்படை முன்னாள் அதிகாரி கைதுசெய்யப்பட்டதாக கலால் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

மேலும், அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பினு வி. வில்லியம், அவருடைய வீட்டில் கஞ்சா செடிகளை வளா்த்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கலால் அமாலக்கம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படையினா் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினா்.

அப்போது, அவா் பதுக்கி வைத்திருந்த 1.2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. வீட்டு தோட்டத்தில் அவா் வளா்த்து வந்த 10 கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக போதை மருந்துகள் மற்றும் மனநோயியல் பொருள்கள் சட்டப் பிரிவுகளில் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடற்படையில் 15 ஆண்டுகள் பணியாற்றிய வில்லியம், பணியில் இருக்கும்போதும் ஓய்வுபெற்ற பிறகும் அவற்றை தொடா்ந்து போதைப் பொருளைப் பயன்படுத்தி வந்தாா். போதைப் பொருளை பெங்களூரிலிருந்து அவா் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.